நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் ரூ. 100 கோடி வசூலை நெருங்கவுள்ளது.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரும்பாலான ரசிகர்களுக்குப் படம் பிடித்திருந்ததால் முதல் நாளிலிருந்து இன்றுவரை ஹவுஸ்ஃபுல் நிலையே தொடர்ந்து வருகிறது.
தமிழகம் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கில் நல்ல வரவேற்பு இருப்பதால் இந்தாண்டின் அதிகம் வசூலித்த திரைப்படங்களின் பட்டியலில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.
இந்த நிலையில், இப்படம் சனிக்கிழமை நிலவரப்படி ரூ. 70 கோடி வரை வசூலித்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. மேலும், இன்றைய முடிவில் உலகளவில் ரூ. 100 கோடி வசூலை நெருங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிக ரீதியான பெரிய வெற்றியைப் பெறாமல் இருந்த சூர்யா, கருப்பு மூலம் அதிகம் வசூலித்த தன் முதல் படத்தைக் கொடுப்பார் என்றே தெரிகிறது.
Actor Suriya's film karuppu is nearing the ₹100 crore mark in box office collections.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








