நடிகை கயாடு லோஹர் தனக்குத் தொந்தரவு அளித்த இளைஞரின் தலையை உடைத்ததாகக் கூறியுள்ளார்.
தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகையாக கயாடு லோஹர் வளர்ந்து வருகிறார். டிராகன் திரைப்படத்தால் தொடர்ந்து இதயம் முரளி, டொவினோ தமாஸுடன் பள்ளிச்சட்டம்பி ஆகிய படங்களில் ஒப்பந்தமானார். இதில், பள்ளிச்சட்டம்பி பெரிய வெற்றியை பெறவில்லை. இதயம் முரளி விரைவில் வெளியாகவுள்ளது.
மேலும், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் மஞ்சணத்தி திரைப்படத்திலும் நடிகர் சூர்யாவின் 48-வது படத்திலும் கயாடு லோஹர் இணைந்துள்ளார்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய கயாடு லோஹர், “நான் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது, ஒருவன் என்னைப் பின்தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டிருந்தான். ஒருகட்டத்தில் கீழே கிடந்த பெரிய கல்லை எடுத்து அவன் மீது எறிந்தேன். மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியது. நான் திரும்பிப் பார்க்காமல் வந்துவிட்டேன். யார் தவறு செய்தாலும் அமைதியாக இருக்கக் கூடாது. திருப்பி எதிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Actress Kayadu Lohar has stated that she smashed the head of a young man who was harassing her.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







