நடிகைகள் பிரியங்கா மோகன், கயாடு லோஹர் ஆகியோர் மஞ்சணத்தி திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் மஞ்சணத்தி. இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். மாரியின் முந்தைய படங்களைப் போல இதுவும் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி - திருநெல்வேலி பகுதி கதையாக உருவாகிறது.
இதில், நடிகர்கள் கதிர், கயாடு லோஹர், பிரியங்கா மோகன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தில் இணைந்ததை, இவர்களே தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தெரியப்படுத்தியுள்ளனர்.
நடிகை பிரியங்கா மோகன் மேட் இன் கொரியா படத்தைத் தொடர்ந்து அரசனில் நடித்து வருகிறார். அதேபோல், கயாடு லோஹர் டிராகன் படத்திற்குப் பின் மலையாளத்தில் பள்ளிச்சட்டம்பி படத்தில் நடித்தார். அது பெரிதாகக் கவனிக்கப்படவில்லை. இவர் நடித்து முடித்துள்ள இதயம் முரளி விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Actresses Priyanka Mohan and kayadu lohar have joined the film Manjanathi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









