ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஏகே - 64 பணிகள் நிறைவு! அறிவிப்பு எப்போது? இயக்குநர் ஆதிக் பதில்!

நடிகர் அஜித் குமாரின் 64-வது திரைப்படம் குறித்து...

Director Adhik with actor Ajith.

நடிகர் அஜித்துடன் இயக்குநர் ஆதிக். - படம்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்.

Published On :19 ஜூலை 2026, 7:19 pm IST

நடிகர் அஜித் குமாரின் 64-வது திரைப்படம் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார்.

குட் பேட் அக்லி வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஏகே - 64 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருப்பதால் ரசிகர்கள் குழம்பியுள்ளனர். நடிகர் அஜித்தின் அதிக சம்பளம் காரணமாகவே பிற தயாரிப்பாளர்கள் அவரை இயக்க முன்வரவில்லை எனக் கூறப்பட்டு வந்தது.

இறுதியாக, குட் பேட் அக்லியை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. லாபகரமான படமாக அமைந்தாலும் அந்த நிறுவனம் மீண்டும் அஜித் படத்தைத் தயாரிக்க முன்வரவில்லை. தற்போது, நடிகர் அஜித்தே அவரது 64-வது படத்தைத் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அஜித் - 64 படத்தை இயக்கும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், “ஏகே - 64 திரைப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்தது. ஆகஸ்ட் மாதம் அதிகாரப்பூர்வ வெளியாகும் என நினைக்கிறேன். அறிவிப்பு வந்ததும் படப்பிடிப்பு ஆரம்பமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

Director Adhik Ravichandran has spoken about actor Ajith Kumar's 64th film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.