ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விரைவில் திரையரங்குகளில் அஜித் குமார் ரேஸிங் ஆவணப்படம்!

அஜித் குமார் ரேஸிங் ஆவணப்படம் வெளியீடு குறித்து...

Published On :17 ஆகஸ்ட் 2026, 2:53 pm IST

நடிகர் அஜித் குமார் ரேசிங் ஆவணப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் அஜித் குமார் சினிமாவை தாண்டி தனக்கு மிகவும் பிடித்த கார் பந்தயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். சில போட்டிகளில் கலந்துகொண்டு சொல்லதக்க வெற்றிகளையும் ஈட்டியுள்ளார்.

மலேசியாவில் நடைபெற்ற கார் பந்தயத்திலும் தன் குழுவினருடன் கலந்துகொண்டார். இதற்கிடையே, பிலிப் சாரியட் மோட்டார் ஸ்போர்ட் சார்பில் இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் இந்தாண்டுக்கான ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது அஜித்துக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து, அஜித் குமார் ரேஸிங் பயிற்சிகள், போட்டிகள், அவரின் பேட்டிகள் ஆகியவற்றை தொகுத்து கிலாடியேட்டர்ஸ் என்கிற பெயரில் ஆவணப்படத்தைத் தயார் செய்துள்ளனர். இதனை, இயக்குநர் ஏ. எல். விஜய் இயக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், இந்த ஆவணத் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியிடத் தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முதல்கட்ட பணிகளும் துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Reports indicate that a racing documentary featuring actor Ajith Kumar is set to be released in theaters soon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.