இதுவரை பகிராத புகைப்படங்கள்... செம்பருத்தி நினைவுகளைப் பகிர்ந்த நடிகை ஷபானா!
செம்பருத்தி தொடரின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்களுடன் நடிகை ஷபானா பகிர்ந்துள்ளார்.


Sembaruthi Serial : செம்பருத்தி தொடரின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகை ஷபானா ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
அதில், தான் செம்பருத்தி தொடரின் ஆடிஷனில் கலந்துகொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் முதல், நிறைவடையும்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் வரை பகிர்ந்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2017 முதல் 2022 வரை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு செம்பருத்தி தொடர் ஒளிபரப்பானது. கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்த பெண், பணிபுரியும் வீட்டின் முதலாளி மகனையே திருமணம் செய்துகொள்ளும் சூழல் ஏற்படுகிறது. அதன் பிறகு அந்த வீட்டில் உள்ளவர்களை எதிர்கொண்டு அவர் சந்திக்கும் சவால்களை மையமாக வைத்து செம்பருத்தி தொடர் ஒளிபரப்பானது.

செம்பருத்தி தொடரில் ஷபானா
இத்தொடரில் நடிகை ஷபானா நாயகியாகவும், கார்த்திக் ராஜ் நாயகனாகவும் நடித்தனர். இத்தொடர் ஷபானாவுக்கு முதல் தொடர் என்றபோதிலும் தொடர்ந்து சிறப்பான நடிப்பை வழங்கி, பார்வதியாக மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
முதல் தொடரே தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பானதால், இத்தொடரில் நடித்த பலருக்கும் பெரிய அங்கீகாரமாக செம்பருத்தி தொடர் அமைந்தது.
இத்தொடருக்குப் பிறகு சன் தொலைக்காட்சியில் மிஸ்டர் மனைவி தொடரில் ஷபானா நடித்திருந்தார்.

செம்பருத்தி தொடரில் ஷபானா
பிறகு விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது போலீஸ் போலீஸ் என்ற இணையத் தொடரில் ஷபானா நடித்து வருகிறார்.
செம்பருத்தி தொடரில் நாயகன் கார்த்திக் ராஜுடன் ஷபானா
இதனிடையே சமீபத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு செம்பருத்தி தொடரின் ஆடிஷனில் கலந்துகொண்ட புகைப்படம் உள்பட, அத்தொடரின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை ஷபானா பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...