டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மகிழ்ச்சி செய்தியைப் பகிர்ந்த சுந்தரி தொடர் நடிகை!

கருவுற்று இருப்பதை தெரிவித்த சுந்தரி தொடர் பிரபலம் ஸ்ரீகோபிகா.

News image
வருண் தேவ் - ஸ்ரீகோபிகா.
Updated On :5 பிப்ரவரி 2026, 6:45 am

இணையதளச் செய்திப் பிரிவு

சுந்தரி தொடரில் நடித்து பிரபலமடைந்த நடிகை ஸ்ரீகோபிகா தான் கருவுற்று இருப்பதாக அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு வளைக்காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீகோபிகா.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அன்பே வா தொடரில் டெல்டா டேவிஸ் விலகிய பிறகு, கண்மணி பாத்திரத்தில் ஸ்ரீகோபிகா நாயகியாக நடித்திருந்தார்.

இவருக்கு வருண் தேவ் என்பவருடன் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி குருவாயூரில் உற்றார் உறவினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

இதனிடையே, நடிகை ஸ்ரீகோபிகா தான் கருவுற்று இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மையில் பகிர்ந்து இருந்தார்.

ஸ்ரீகோபிகா

ஸ்ரீகோபிகா

இந்த நிலையில் வருண் தேவ் - ஸ்ரீகோபிகா தம்பதியினருக்கு வளைக்காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வளைக்காப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை ஸ்ரீகோபிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சின்ன திரை பிரபலங்கள் மற்றும் அவருடைய ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.