பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

என் படங்கள் திரைக்கு வருவதே போராட்டம்தான்: ராம்

இயக்குநர் ராம் தன் படங்கள் குறித்து பேசியுள்ளார்...

News image

இயக்குநர் ராம்

Updated On :25 ஜூன் 2025, 6:20 am

இயக்குநர் ராம் தன் திரைப்பயணம் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் சிவா, அஞ்சலி நடித்த பறந்து போ திரைப்படம் ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உணர்வுகளைப் பேசும் படமாக இது உருவாகியுள்ளது. டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளதால் வெளியீட்டிற்காகப் பலர் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் ராம், “நான் இயக்கும் படங்கள் திரைக்கு வரும்போதே சில பிரச்னைகளைச் சந்திக்கும். முதல் படத்திலிருந்தே அதைச் சந்தித்து வருகிறேன். ஏழுகடல் ஏழுமலை படம் நான் இயக்கிய படங்களில் பட்ஜெட் அதிகமானது. அதன் வணிகத்தை தயாரிப்பாளர் முடித்த பிறகே திரைக்கு வரும். திட்டமிட்டு இந்த துறையில் நான் இயங்குவதில்லை.

Story image

என்னிடம் வரும் தயாரிப்பாளர்கள் வித்தியாசமான படத்தைக் கொடுக்கவே விரும்புகின்றனர். அதனால், நான் சந்திக்கும் சிரமங்களைப் போல அவர்களும் வணிக ரீதியான சிக்கல்களைச் சந்திக்கின்றனர். கற்றது தமிழ், தங்க மீன்கள் படமெல்லாம் வெளியானதே பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்டது. பறந்துபோ படத்திற்கும் தங்க மீன்கள் படத்திற்கும் சில ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் உண்டு. ” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.