பிரபல நடிகை ராதிகா தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி கெளசல்யா ரூ. 1 கோடி பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
கோடீஸ்வரி நிகழ்ச்சி, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த டிசம்பர் 13 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. பெண்கள் மட்டுமே போட்டியாளர்களாகப் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிப் பெண் ரூ. 1 கோடி பரிசை வென்று சாதனை படைத்துள்ளார். மதுரை நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் கெளசல்யா, காது கேளாத, வாய் பேச முடியாதவர். கோடீஸ்வரி போன்ற நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளி ஒருவர் பங்கேற்று ரூ. 1 கோடி பரிசு வென்றதும் இதுவே முதல்முறை.
இந்நிலையில், கெளசல்யா எந்தக் கேள்விக்கு விடையளித்து ரூ. 1 கோடியைத் தட்டிச் சென்றார் என்கிற ஆவல் பலரிடமும் உள்ளது. கெளசல்யா விடையளித்த கேள்வி இதுதான்.
மன்னர் இரண்டாம் புலிகேசியின் கற்பனை இரட்டைச் சகோதரரான நாகநந்தி என்னும் கதாபாத்திரம், 1948-ன் எந்த வரலாற்று நாவலில் தோன்றுகிறது?
அ) பார்த்திபன் கனவு
ஆ) வேங்கையின் மைந்தன்
இ) சிவகாமியின் சபதம்
ஈ) யவன ராணி
இந்தக் கேள்விக்கு, சிவகாமியின் சபதம் என்று சரியாகப் பதில் அளித்தார் கெளசல்யா. 15 கேள்விகளுக்கும் சரியாகப் பதில் அளித்ததால் ரூ. 1 கோடி பரிசுத்தொகையை அவர் தட்டிச் சென்றுள்ளார்.
ஒருவேளை, இந்தக் கேள்விக்குத் தவறாக விடை சொல்லியிருந்தால் கெளசல்யாவுக்கு ரூ. 3 லட்சத்துக்கு 20 ஆயிரம் மட்டுமே கிடைத்திருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


