பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

அஜித்துக்கு வில்லனாக வலிமை படத்தில் நடிக்கிறேனா?: நடிகர் பிரசன்னா விளக்கம்

வலிமை படத்தில் நடிகர் பிரசன்னா வில்லனாக நடிப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த வாய்ப்பு தற்போது அமையவில்லை என்று...

News image
Updated On :21 ஜனவரி 2020, 5:32 am

நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணையும் இப்படத்துக்கு வலிமை எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. வலிமை படம் தீபாவளிக்கு வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வலிமை படத்தில் நடிகர் பிரசன்னா வில்லனாக நடிப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த வாய்ப்பு தற்போது அமையவில்லை என்று நடிகர் பிரச்ன்னா விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

நான், வலிமை படத்தில் நடிக்கவேண்டும் என்று விரும்பிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி. வலிமை படத்தில் நான் நடிப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடந்தது. என் வாழ்க்கையின் மிகப்பெரிய தருணம் குறித்து தகவல் தெரிவிக்க நானும் ஆவலாக இருந்தேன். ஆனால் அஜித்துடன் சேர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பு இந்தமுறை அமையவில்லை. இந்த வருத்தத்தில் நான் இருக்கும் சமயத்தில் உங்கள் அன்பினால் இன்னமும் வலிமை பெறுகிறேன். எப்போதும் அடுத்த வாய்ப்பு நிச்சயம் அமையும். அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு விரைவில் அமையும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.