/

சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்!

கடந்த 6-ம் தேதி சீனாவில் 2.0 படம் வெளியானது. ஹிந்திப் படங்களுக்கு சீனாவில் வரவேற்பு இருப்பது போல 2.0 படமும்...

News image
Updated On :14 செப்டம்பர் 2019, 9:22 am

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவான 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்தார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்தார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவானது. இந்தப் படம் வெளியான முதல் வாரத்தில் உலகளவில் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில் கடந்த 6-ம் தேதி சீனாவில் 2.0 படம் வெளியானது. ஹிந்திப் படங்களுக்கு சீனாவில் வரவேற்பு இருப்பது போல 2.0 படமும் அங்கு வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் வாரத்தில் ரூ. 22 கோடியை மட்டுமே ஈட்டியுள்ளது 2.0 படம். இதேபோல கடந்த வருடம் மே மாதம், எஸ்.எஸ். ராஜமெளலியின் பாகுபலி 2 படம் சீனாவில் வெளியாகி, ரூ. 52 கோடி மட்டுமே வசூலித்தது. ஹிந்திப் படங்களுக்கு நிகராக சீனாவில் தென்னிந்தியப் படங்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. 

சீனாவில் இந்தியப் படங்களுக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. இதுவரை அங்கு எட்டு ஹிந்திப் படங்கள் ரூ. 100 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்துள்ளன. கடந்த மே மாதம், மறைந்த ஸ்ரீதேவி நடித்த மாம் படம் சீனாவில் வெளியாகி, ரூ. 100 கோடி வசூலித்த 8-வது இந்தியப் படம் என்கிற பெருமையை அடைந்தது. இதனால் அதே வரவேற்பை 2.0 படமும் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வியடைந்துள்ளது.

சீனாவில் 15 மில்லியன் டாலர் (ரூ. 100 கோடி) வசூலித்துள்ள இந்தியப் படங்கள்

2015: பிகே 
2017: டங்கல் ( சீனாவில் 100 மில்லியன் டாலர் வசூல்)  
2018: சீக்ரெட் சூப்பர்ஸ்டார் ( சீனாவில் 100 மில்லியன் டாலர் வசூல்)
2018: ஹிந்தி மீடியம்  
2018: பஜ்ரங்கி பைஜான்  
2018: ஹிச்கி 
2019: அந்தாதுன் 
2019: மாம் 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.