/

என்ஜிகே படத்துக்குக் கிடைத்த முடிவு என்னைப் பாதிக்கவில்லை: சூர்யா

என்ஜிகே படத்தின் கதையை உருவாக்க இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொண்டார் செல்வராகவன்.

News image
Updated On :14 செப்டம்பர் 2019, 8:58 am

எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் உருவான படம் - என்ஜிகே. இப்படத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா.

சமீபத்தில் வெளியான இந்தப் படம் குறித்து நடிகர் சூர்யா, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

என்ஜிகே படத்தின் கதையை உருவாக்க இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொண்டார் செல்வராகவன். நான்கு வரைவுகளுடனும் 3 கிளைமாக்ஸ் காட்சிகளுடனும் வந்தார். படத்துக்காகத் தேர்ந்தெடுத்ததைச் சிறந்ததாக நாங்கள் எண்ணினோம். தயாரிப்பாளர், இயக்குநர், நான் என மூவரும் ஒரே அலைவரிசையில் இருந்தோம். மிகவும் நேர்மையாக என்ஜிகே படத்தில் பணியாற்றினோம். படத்துக்குக் கிடைத்த முடிவு என்னைப் பாதிக்கவில்லை. ஆனால் அதுபோன்ற ஒரு படம் நன்றாக ஓடியிருக்கலாம் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.