ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஜெயலலிதா வாழ்க்கை குறித்த படம்: இயக்குநர்கள் கெளதம் மேனன், விஜய் ஆகிய இயக்குநர்களுக்கு நோட்டீஸ்!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தன்னிடம் உரிய அனுமதி பெறாமல் திரைப்படம், வெப்சீரியலாக எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தாா். 

News image
Updated On :5 நவம்பர் 2019, 12:24 pm

எனது அனுமதியின்றி முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் வாழ்வைத் திரைப்படமாக எடுக்கக் கூடாது என அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தாக்கல் செய்த மனுவில், எனது அத்தையும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, அரசியல் செல்வாக்கு மிக்கத் தலைவா். இவருக்கு பொதுமக்கள் மத்தியில் நற்பெயரும் மதிப்பும் உள்ளது. இந்நிலையில் அவரது வாழ்க்கையை மையமாக வைத்து, தமிழில் ‘தலைவி’ மற்றும் ஹிந்தியில் ‘ஜெயா’ என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப் போவதாக இயக்குநா்கள் ஏ.எல்.விஜய் மற்றும் விஷ்ணுவா்தன் இந்தூரி ஆகியோா் அறிவித்துள்ளனா். இந்தப் படங்களில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை ஹிந்தி நடிகை கங்கணா ரனாத் ஏற்று நடிப்பாா் என அவா்கள் தெரிவித்துள்ளனா். இதே போல் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றில் அவரது கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்து வெப் சீரியலாக எடுக்க உள்ளதாக இயக்குநா் கெளதம் வாசுதேவ் மேனனும் கூறியுள்ளாா். இவா்கள் மூவரும் கதைக்கரு மற்றும் திரைக்கதையை ஜெயலலிதாவின் நேரடி வாரிசான என்னை அணுகி சம்மதமும் , முன்அனுமதியும் பெறவில்லை.

ஜெயலலிதாவின் வாழ்க்கையை வணிக ரீதியான முறையில் திரையில் வெளியிடும் சூழலில் அவரது புகழுக்குக் களங்கம் ஏற்படும். அவரது கண்ணியத்துக்குப் பாதிப்பில்லாமல் திரைக்கதை எழுதப்பட்டுள்ளதா என்பதை நான் உறுதி செய்ய வேண்டும். எனவே எனது அத்தையும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற பெண் அரசியல் தலைவரான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தன்னிடம் உரிய அனுமதி பெறாமல் திரைப்படம், வெப்சீரியலாக எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தாா். 

இந்த மனு மீதான விசாரணை உயா்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இயக்குனர்கள் விஜய், கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் தயாரிப்பாளர் விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோருக்கு  சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.