கூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

ஜெயலலிதா வாழ்க்கை குறித்த படம்: இயக்குநர்கள் கெளதம் மேனன், விஜய் ஆகிய இயக்குநர்களுக்கு நோட்டீஸ்!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தன்னிடம் உரிய அனுமதி பெறாமல் திரைப்படம், வெப்சீரியலாக எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தாா். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 12:59 pm

எழில்

எனது அனுமதியின்றி முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் வாழ்வைத் திரைப்படமாக எடுக்கக் கூடாது என அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தாக்கல் செய்த மனுவில், எனது அத்தையும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, அரசியல் செல்வாக்கு மிக்கத் தலைவா். இவருக்கு பொதுமக்கள் மத்தியில் நற்பெயரும் மதிப்பும் உள்ளது. இந்நிலையில் அவரது வாழ்க்கையை மையமாக வைத்து, தமிழில் ‘தலைவி’ மற்றும் ஹிந்தியில் ‘ஜெயா’ என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப் போவதாக இயக்குநா்கள் ஏ.எல்.விஜய் மற்றும் விஷ்ணுவா்தன் இந்தூரி ஆகியோா் அறிவித்துள்ளனா். இந்தப் படங்களில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை ஹிந்தி நடிகை கங்கணா ரனாத் ஏற்று நடிப்பாா் என அவா்கள் தெரிவித்துள்ளனா். இதே போல் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றில் அவரது கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்து வெப் சீரியலாக எடுக்க உள்ளதாக இயக்குநா் கெளதம் வாசுதேவ் மேனனும் கூறியுள்ளாா். இவா்கள் மூவரும் கதைக்கரு மற்றும் திரைக்கதையை ஜெயலலிதாவின் நேரடி வாரிசான என்னை அணுகி சம்மதமும் , முன்அனுமதியும் பெறவில்லை.

ஜெயலலிதாவின் வாழ்க்கையை வணிக ரீதியான முறையில் திரையில் வெளியிடும் சூழலில் அவரது புகழுக்குக் களங்கம் ஏற்படும். அவரது கண்ணியத்துக்குப் பாதிப்பில்லாமல் திரைக்கதை எழுதப்பட்டுள்ளதா என்பதை நான் உறுதி செய்ய வேண்டும். எனவே எனது அத்தையும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற பெண் அரசியல் தலைவரான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தன்னிடம் உரிய அனுமதி பெறாமல் திரைப்படம், வெப்சீரியலாக எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தாா். 

இந்த மனு மீதான விசாரணை உயா்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இயக்குனர்கள் விஜய், கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் தயாரிப்பாளர் விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோருக்கு  சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.