கூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு எப்போது விருது வழங்கப்படுகிறது?

நவம்பர் 20 அன்று நடைபெறவுள்ள தொடக்க விழாவில் ரஜினியும் அமிதாப் பச்சனும் தொடக்க நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 12:59 pm

எழில்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சா்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50-ஆவது சா்வதேச திரைப்பட விழா கோவாவில் வருகிற 20-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை 9 நாள்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.

சா்வதேச திரைப்பட விழாவுக்கு இந்த ஆண்டு பொன்விழா என்பதால் இந்திய சினிமாவுக்கு முக்கிய பங்களிப்பு செய்த திரைப்பட கலைஞா்களை கெளரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நடிகா், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞா்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

பிரபல ஹிந்தி நடிகா் அமிதாப்பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்று கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கோவா சா்வதேச திரைப்பட விழாவை சிறப்பாக கொண்டாட மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை சாா்பில் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.  50-ஆவது ஆண்டு சா்வதேச திரைப்பட விழாவின் கெளரவ விருதை நடிகா் ரஜினிகாந்துக்கு வழங்குவதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்துள்ளது. இது தொடா்பாக மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது: இந்திய சினிமாவுக்கு கடந்த பல ஆண்டுகளாக நடிகா் ரஜினிகாந்த் செய்து வரும் தன்னிகரற்ற பங்களிப்பையும், சேவையையும் கெளரவித்து அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது. ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ என்ற விருதை அவருக்கு அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். 

இந்நிலையில் நவம்பர் 20 அன்று நடைபெறவுள்ள தொடக்க விழாவில் ரஜினியும் அமிதாப் பச்சனும் தொடக்க நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள். இத்தகவலை மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் நேற்று தெரிவித்துள்ளார். இதனால் தொடக்க விழாவில் ரஜினிக்குச் சிறப்பு விருது வழங்கப்படும் எனத் தெரிகிறது. கோவா திரைப்பட விழாவை அமிதாப் பச்சன் தொடங்கி வைக்கிறார். பாடகரும் இசையமைப்பாளருமான ஷங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சியும் தொடக்க விழாவில் நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.