தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

நடிகர் விஷாலுக்கு அனிஷாவுடன் இன்று திருமண நிச்சயதார்த்தம்!

நடிகர் விஷால், தெலுங்கு நடிகை அனிஷா அல்லா ரெட்டியைத் திருமணம் செய்யவிருப்பதாக சில மாதங்கள் முன்பு தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்

News image
Updated On :16 மார்ச் 2019, 5:32 am

நடிகர் விஷால், தெலுங்கு நடிகை அனிஷா அல்லா ரெட்டியைத் திருமணம் செய்யவிருப்பதாக சில மாதங்கள் முன்பு தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார். திருமணத் தேதியை விரைவில் அறிவிக்கிறேன் என்றும் கூறியிருந்தார். 

விஷால்-அனிஷா திருமண நிச்சயதார்த்தம் இன்று (16 மார்ச்) ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அனிஷா ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகள் ஆவார். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர். அர்ஜுன் ரெட்டி, பெல்லி சொப்புலு போன்ற தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். 

நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்த பின்புதான் திருமணம் செய்து கொள்வேன் என்று விஷால் உறுதி எடுத்திருந்தார். கட்டிடப் பணிகள் முடியும் தருவாயில் இருக்கிறது. ஆகஸ்டு மாதம் நடிகர் சங்க கட்டிடத்தில் இவர்கள் திருமணம் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திருமண தேதியை இன்று இரு குடும்பத்தாரும் முடிவு செய்கிறார்கள். விரைவில் அதிகாரபூர்வ அறிவுப்பு வெளியிடப்படும் என்கிறது விஷால் தரப்பு. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.