தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

நடிகை அனுபமா பரமேஸ்வரனை ட்விட்டரில் பின்தொடர்வதை நிறுத்திவிட்டார் பும்ரா!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் பும்ரா ட்விட்டரில் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனை ஃபாலோ செய்வதை நிறுத்தியுள்ளார்.

News image
Updated On :10 ஜூலை 2019, 9:18 am

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்பரீத் பும்ரா ட்விட்டரில் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனை ஃபாலோ செய்வதை நிறுத்தியுள்ளார்.

அண்மையில் இப்படியொரு சர்ச்சை எழுந்தது. அதாவது பும்ரா மற்றும் அனுபமா இருவரும் டேட்டிங் செய்கிறார்கள் என்று வதந்திகள் பரவியது. இதைத் தொடர்ந்து டிவிட்டரில் அனுபமாவை பின் தொடர்வை பும்ரா நிறுத்திவிட்டார். 

ட்விட்டரில், பும்ரா பின் தொடர்ந்து வரும் 25 நபர்களில் அனுபமா பரமேஸ்வரன் மட்டுமே நடிகை என்பதால் இத்தகைய வதந்தி பரவியது.ஒரு நேர்காணலில் பும்ரா தன்னுடைய நெருங்கிய நண்பர், அதற்கு மேல் இது குறித்து சொல்ல எதுவுமில்லை என்று அனுபமா தெளிவாக கூறியிருந்தார். ஆனால் அதை கண்டுகொள்ளாமல் சில பத்திரிகைகள் அவர்கள் டேட்டிங்கில் உள்ளார்கள் என்று எழுதினர். அதனால் பும்ரா ட்விட்டரில் அனுபமாவைப் பின்தொடர்வதை தற்போது நிறுத்தியுள்ளார். பும்ராவை 24 நபர்களை மட்டுமே ட்விட்டரில் பின்தொடர்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.