15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வைரலாகும் டீஸர்! நடிகர் விஜய் மகன் சஞ்சய் நடித்த குறும்படம்! (விடியோ)

இணையத்தில் அடிக்கடி ஒரு விடியோ வைரலாகி பரபரப்பாகிவிடும். இந்த முறை வைரல் ரேஸில் முந்தியிருப்பவர் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய்.

News image
Updated On :24 செப்டம்பர் 2018, 10:25 am

இணையத்தில் அடிக்கடி ஒரு விடியோ வைரலாகி பரபரப்பாகிவிடும். இந்த முறை வைரல் ரேஸில் முந்தியிருப்பவர் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய்.

சஞ்சய் கடந்த 2009-ல் தந்தையுடன் `வேட்டைக்காரன்' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். தற்போது ஃபிலிம் மேக்கிங் கோர்ஸ் ஒன்றினை படித்து முடித்துள்ள சஞ்சய், அடுத்து திரைத் துறையில் முழு வீச்சுடன் இறங்க முடிவெடுத்துள்ளார். அதன் தொடக்கமாக குறும்படம் ஒன்றினை இயக்கி நடித்துள்ளார். ‘ஜங்ஷன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் 11 விநாடிகள் கொண்ட டீஸரை இன்று சஞ்சய் வெளியிட்டுள்ளார்.

டீஸர் வெளியானதும் விஜய் ரசிகர்களிடமிருந்து பலத்த பாராட்டுகளைப் பெற்றது. ரசிகர்கள் இந்த டீஸரை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

அண்மையில் விஜய்க்கு ஐரா சார்பில் சிறந்த சர்வதேச நடிகர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இரட்டிப்பு மகிழ்ச்சியாக அவரது மகன் நடித்துள்ள குறும்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளதால், விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். ஹாட்ரிக்காக, இன்று 'சர்கார்' படத்தின் சிங்கிள் ட்ராக் பாடலும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.