15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

செக்கச் சிவந்த வானம் வெளியாவதில் திடீர் சிக்கல்!

செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா எரப்பா போன்றோர் நடித்துள்ளார்கள்.

News image
Updated On :21 செப்டம்பர் 2018, 10:52 am

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா எரப்பா போன்றோர் நடித்துள்ளார்கள். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. செப்டம்பர் 27 அன்று படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இத்திரைப்படத்தில் நாய் சார்ந்த காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதால் விலங்கியல் நல வாரியம் இப்படத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்துள்ளது.

கடந்த மாதம் 27-ம் தேதி இதே காரணத்துக்காக செக்கச் சிவந்த வானம் திரைப்படத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்ததால் மறுபடியும் படக்குழுவினரால் சமப்பிக்கப்பட்ட நிலையில், மீண்டும் விலங்கியல் நல வாரியத்திலிருந்து மறுப்பு வந்துள்ளது.

போலவே விஷால் நடிப்பில் வெளிவரவிருக்கும் சண்டைகோழி 2, ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி ஆகிய படங்களுக்கும் NOC வழங்க மறுத்துள்ளது விலங்கியல் நல வாரியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.