தமிழகத்தை கடந்த சில வாரங்களாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீரெட்டி புயலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பிரபலங்களில் நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸும் ஒருவர். ஸ்ரீரெட்டி இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார். நல்லவர் போல நடித்து தாம் அடுத்த இயக்கவிருக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பளிப்பதாக உறுதியளித்து ராகவா லாரன்ஸ் தம்மிடம் முறையற்று நடந்து கொண்டதாகவும். ஆனால், தம்மை பயன்படுத்திக் கொண்ட பின்னர் ராகவா லாரன்ஸ் சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை என்றும் ஸ்ரீரெட்டி தனது முகநூலிலும் செய்தி ஊடக நேர்காணல்களிலும் புகார் தெரிவித்திருந்தார்.