தான் இறப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே மவுனிகாவுடனான தனது உறவை துண்டித்த பாலுமகேந்திரா, அந்தப் பிரிவுக்கான காரணத்தைப் பற்றி ஒருபோதும் மவுனிகாவிடம் விளக்கமளிக்க முயற்சித்ததில்லை என்கிறார் மவுனிகா. அவர் உயிரோடு இருக்கும் போதே நிகழ்ந்த அந்தப் பிரிவு தன்னை மனதளவில் மிகவும் உருக்கியதாகக் குறிப்பிடும் மவுனிகா, பிரிவின் போது ஒரே ஒருமுறை பிரிவுக்கான காரணமாகத் தனது வயோதிகத்தை குறிப்பிட்டு பாலுமகேந்திரா தனக்கொரு கடிதம் அனுப்பியதாகத் தெரிவிக்கிறார். அந்தக் கடிதத்தில் . தனது வயோதிகத்தை மவுனிகாவின் மேல் சுமத்த பாலுமகேந்திரா விரும்பாததால் தான் அந்தப் பிரிவு நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார், ஆனால், அதை ஒரு போதும் தன்னால் ஏற்றுக் கொள்ளவே முடிந்ததில்லை எனவும், அந்த ஒரு காரணத்திற்காகவே பாலுமகேந்திராவின் ஆன்மாவைக் கூட தான் தற்போதும் மன்னிக்க விரும்பவில்லை எனவும் மவுனிகா சமீபத்திய தனது நேர்காணலொன்றில் தெரிவித்துள்ளார்.