டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நான் சீரியலுக்கே முன்னுரிமை தருவேன்: சொன்ன நடிகை யார்?

திரைப்படங்களில் அவருக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தும் இப்படியே அமைய... பொறுத்துப் பார்த்தவர் தூர்தர்ஷனின் ‘ஓம் நமச்சிவாயா’ தொடரில் பார்வதியாக நடிக்க நல்ல வாய்ப்பொன்று கிடைக்க.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:17 pm

சரோஜினி

தமிழ் சீரியல் உலகில் நடிகை காயத்ரியைத் தெரியாதவர் இருக்க முடியாது. காயத்ரி பெங்களூரைச் சேர்ந்தவர். தற்போது திருமணத்திற்குப் பிறகு கணவர், குழந்தைகளுடன் மும்பையில் வசிக்கிறார். காயத்ரியின் திரை வாழ்வை தூசி தட்டினால் சில ஆச்சர்யங்கள் கிடைக்கக் கூடும். காயத்ரி தமிழில் அறிமுகமான முதல் திரைப்படம் ரேவதியின் ‘பாசமலர்கள்’ அதில் அரவிந்த் சுவாமி ஹீரோ. அவர் 5 ஆதரவற்ற குழந்தைகளை ஒரு காப்பகத்தில் இருந்து தத்தெடுத்து வளர்ப்பதாகக் கதை செல்லும். அந்த 5 குழந்தைகளில் ஒருவராகத் தான் தமிழ் சினிமாவில் காயத்ரியின் அறிமுகம் நிகழ்ந்தது. அதன் பின்னர் காயத்ரி விஜய், அஜித் இணைந்து நடித்த ‘ராஜாவின் பார்வையில்’ திரைப்படத்தில் ஓரிரு காட்சிகளில் நடித்திருந்தார். கதைப்படி அஜித் தற்கொலை செய்து கொள்ள அதற்கு காரணமாகும் முன்னாள் காதலியாக நடித்திருந்தார் காயத்ரி.

திரைப்படங்களில் அவருக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தும் இப்படியே அமைய... பொறுத்துப் பார்த்தவர் தூர்தர்ஷனின் ‘ஓம் நமச்சிவாயா’ தொடரில் பார்வதியாக நடிக்க நல்ல வாய்ப்பொன்று கிடைக்க. தொடர்ந்து 5 ஆண்டுகள் அதில் செட்டிலானார். அந்தத் தொடர் வாயிலாக அவருக்கு டிவி ரசிகர்களிடையே நல்ல அறிமுகம் கிடைத்ததோடு ஏகோபித்த வரவேற்பும் கிடைத்தது. ஓம் நமச்சிவாயாவைத் தொடர்ந்து கிடைத்த ‘மெட்டி ஒலி’ வாய்ப்பும் காயத்ரிக்கு சீரியல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதனடிப்படையில் தனது திரை வாழ்க்கை எத்திசையில் செல்ல வேண்டும் என்பதை முடிவெடுத்ததாகக் கூறும் காயத்ரி, தனது நேர்காணலொன்றில், ஒரே நேரத்தில் ஒரு திரைப்பட வாய்ப்பும், சீரியல் வாய்ப்பும் கிடைக்கும் போது தன்னுடைய முன்னுரிமை என்பது எப்போதும் சீரியல் வாய்ப்புக்கே இருக்கும் என்கிறார். காரணம், சீரியலில் தனக்குக் கிடைக்கக்கூடிய சுதந்திரமும், வசதியும் திரைப்படங்களில் கிடைக்க முடியாது என்பதாலும் தான் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.