தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

நடிகர் ராகவா லாரன்ஸின் அடுத்த படம் டைட்டில் இதுதான்!

ராகவா லாரன்ஸ் மனத்தில் பட்டதை வெளிப்படையாக கூறும் இயல்புடையவர். சமீபத்தில்

News image
Updated On :21 ஜனவரி 2018, 6:49 am

ராகவா லாரன்ஸ் மனத்தில் பட்டதை வெளிப்படையாக கூறும் இயல்புடையவர். சமீபத்தில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பேசியது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்விதமாக அமைந்தது.

இவ்வளவு நாள், நாம் அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லி வந்தோம். அந்த அசுத்தத்தை ஆன்மீக அரசியல் மூலம் சுத்தம் செய்யவே ரஜினி அரசியலுக்கு வந்திருக்கிறார். ஆன்மீகத்துக்கும், மதவாதத்துக்கும் வித்தியாசம் உள்ளது. ‘மனசாட்சிப்படி உன் மனதில் ஆண்டவன் இருக்கிறான்’ என்றால் அது ஆன்மீகம். அதுவே, ‘உன் மனதில் ஜீசஸ் தான் இருக்கிறார், அல்லா தான் இருக்கிறார், சிவன் தான் இருக்கிறார்’ என்றால் அதுதான் மதவாதம்.

Story image

எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் ரஜினிகாந்த். மக்களுக்கு நல்லது செய்யவில்லை என்றால், எனது மனசாட்சி என்னை வாழ்நாள் முழுவதும் குத்திக் கொண்டே இருக்கும் என்று ரஜினி கூறியதைப் போல், என்னை வாழவைத்த ரஜினி அவர்கள், மக்களை பாதுகாக்க செல்லும் போது, அவருக்கு ஆதரவாக நான் நிற்கவில்லை என்றால், என் மனசாட்சி என்னை வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ விடாது’ என்று நெகிழ்ச்சியாக பேசிய லாரன்ஸ், ரஜினிகாந்த் கூறுவதை கேட்டு அதன்படி ரசிகர்கள் நடந்தால், அவர் கோட்டையை பிடிப்பது உறுதி’ எனக் கூறினார். 
 
ராகவா லாரன்ஸ் தற்போது 'காஞ்சனா 3' படத்தில் நடித்து வருகிறார். இதில் ஓவியா, வேதிகா, நிகிதா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அண்மையில் பாகுபலி கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ள கதையில் லாரன்ஸ் இயக்கி நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் கோலிவுட்டில் பரபரப்பானது. தற்போது அந்தப் படத்திற்கு 'கால பைரவா' என தலைப்பு வைத்துள்ளார் ராகவா. இது ஹாரர் படமாக ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என்றும் மார்ச் மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

'காஞ்சனா 3' பட வேலைகள் பாதி முடிவடைந்த நிலையில் முழுவதும் முடிந்தவுடன் 'கால பைரவா' படத்தைத் தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி நடிக்கவிருப்பதாக ராகவா முடிவெடுத்துள்ளாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.