தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இந்தி, ஆங்கிலம் உட்படத் தமிழிலும் தயாராகும் ஆஸ்கர் இயக்குநரின் படம்

ஈரான் நாட்டைச் சேர்ந்த சர்வதேச திரைப்பட இயக்குநரான மஜீத் மஜீதியின் இந்தி படம் ‘பியாண்ட் தி கிளொவ்ட்ஸ்’ திரைப்படம் இந்தி உட்பட ஆங்கிலம் மற்றும் தமிழிலும் உருவாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜூன் 2017, 11:42 am

ஈரான் நாட்டைச் சேர்ந்த சர்வதேச திரைப்பட இயக்குநரான மஜீத் மஜீதியின் ‘பியாண்ட் தி கிளொவ்ட்ஸ்’ திரைப்படம் இந்தி உட்பட ஆங்கிலம் மற்றும் தமிழிலும் உருவாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையின் எதார்த்தங்களைப் படமாக்கி ஆஸ்கார் விருதைப் பெற்றவரான இவருடைய முதல் இந்தி படம் இதுவாகும்.

ஷாயித் கபூரின் சகோதரரான இஷான் காட்டர் மற்றும் மாளவிக்கா மோகனன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துவரும் இந்தப் படத்தை ஜி ஸ்டுடியோ மற்றும் ஐகாண்டி ஃபில்ம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படமானது வருங்காலத்தில் பன்மொழியில் தயாராகும் இந்திய படங்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Story image

3 மொழியில் தயாராகும் இந்தப் படம் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டோ அல்லது ஒரே நேரத்தில் தனி தனியோ உருவாகப் போவதோ இல்லை, 3 மொழிகளும் கொண்ட ஒரே படமாக இது உருவாகி வருகிறது. இதைப்பற்றி இயக்குநர் மஜீத் கூறுகையில், “மூன்று மொழிகளும் சிறிது அளவு மட்டும் ஆங்காங்கே படத்தில் வரப்போவதில்லை, மூன்று மொழிகளுக்கும் படத்தில் முக்கிய பங்குண்டு, மேலும் அந்த அந்த மொழிகளில் நல்ல ஆளுமை உடையவர்களை வைத்தே படத்தை உருவாக்கவுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

இயக்குநர் மஜீத் அவர்கள் ‘ச்சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ என்ற படத்திற்காக ஆஸ்கார் விருதை வாங்கியவர், மேலும் ‘தி கலர் அஃப் பாரடைஸ்’ மற்றும் ‘பரான்’ ஆகிய படங்கள் இவருடைய தலைசிறந்த படங்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கவை.

இந்தப் படம் அண்ணன் தங்கை உறவை மையமாகக் கொண்டு அவர்களைச் சுற்றி நடக்கும் வாழ்க்கை எதார்த்தங்களை மிக அழுத்தமாகப் பதிவு செய்யும் வகையில் இருக்கும் எனக் கருதப்படுகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இசையமைத்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.