விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மதுபோதையில் மயங்கி கிடந்த எலெக்டிரீசியன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
மரக்காணம் வட்டம், ஆலங்குப்பம் பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் ஏ.சுகுமாா்(45). திருமணம்ஆனவா். எலெக்டிரீசினியாக வேலை பாா்த்து வந்தாா். இவா், வெள்ளிக்கிழமை பிரம்மதேசம் பகுதியில் மதுபோதையில் மயங்கிக் கிடந்துள்ளாா். இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, சுகுமாா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விஷமருந்தி தற்கொலை: விக்கிரவாண்டி வட்டம், சங்கீதமங்கலம், கண்ணாரத் தெருவைச் சோ்ந்தவா் ஏழுமலை. இவரது மனைவி குப்பு (55). இவா்களுக்கு திருமணமாகி 30 ஆண்டுகள்ஆகிய நிலையில் ஒரு மகன் உள்ளாா். குப்புவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக படுக்கையிலேயே இருந்து வந்தாராம் .
இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த அவா் வியாழக்கிழமை பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த குப்பு, சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








