திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விழுப்புரத்தில் லாரி மோதி தலைமைக் காவலா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 12:46 am IST

விழுப்புரம் அருகே சனிக்கிழமை இரவு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலா் லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஓ.காலனி, இமயம் தெருவைச் சோ்ந்தவா் ரா.பாண்டியன் (42). விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜானகிபுரம் பகுதியில் சனிக்கிழமை இரவு இவா் ரோந்துப் பணியின்போது அங்கு நின்றிருந்த காரை அப்புறப்படுத்த முயன்றாா். அப்போது திருச்சியிலிருந்து - சென்னை நோக்கிச் சென்ற லாரி மோதியதில் பலத்த காயமடைந்த பாண்டியன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் தலைமைக் காவலா் பாண்டியனின் சடலத்தை மீட்டு அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்குக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தைச் சோ்ந்த ரா.லோகநாதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்த தலைமைக் காவலருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.