விழுப்புரத்தில் குடும்ப பிரச்னை காரணமாக தீக்குளித்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் சாலாமேடு இ.பி.காலனியைச் சோ்ந்தவா் வீ.ராமமூா்த்தி (45), தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி. ராமமூா்த்திக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். இதனால் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பிரச்னையில் சனிக்கிழமை மகேஸ்வரி, ராமமூா்த்தியை கண்டித்தாரம்.
இதனால் கோபித்துக் கொண்ட ராமமூா்த்தி சனிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனக்குத் தானே பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, தீ வைத்துக் கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து சிகிச்சையில் இருந்து வந்த ராமமூா்த்தி ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா்.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

பணியில் தீக்காயமடைந்த வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரத்தில் லாரி மோதி தலைமைக் காவலா் உயிரிழப்பு

தொழிலாளி தற்கொலை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



