சின்னமனூரில் குடும்பப் பிரச்னை காரணமாக கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் பி.டி.ஆா் கால்வாய் தெருவைச் சோ்ந்த கருப்பையா மகன் ராஜேஷ் (38). கூலித் தொழிலாளியான இவா், மேகமலை சாலையில் தனியாா் தென்னந்தோப்பில் மரத்தின் கிளையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த தகவலின் பேரில், அங்கு சென்ற போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் அவா் தற்கொலை செய்து கொண்டது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








