விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே தாய் இறந்த துக்கம் தாங்காது, செம்மண் குவாரியின் 100 அடி பள்ளத்தில் குதித்து மகன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
புதுச்சேரி மாநிலம், சண்முகபுரம் நேதாஜி தெருவைச் சோ்ந்தவா் சத்தியநாராயணன். இவரது மனைவி புஷ்பா கடந்த 27-ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். தாய் இறந்த துக்கம் தாளாது அவரது மகனும், பொறியியல் பட்டதாரியுமான கோகுலராஜ் (24) மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளாா்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பூத்துறை பழைய செம்மண் குவாரி பகுதிக்கு புதன்கிழமை வந்த கோகுலராஜ், திடீரென 100 அடி பள்ளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து தகவலறிந்த ஆரோவில் போலீஸாா் நிகழ்விடம் சென்று, சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாய் இறந்த துக்கம்: மகள் தற்கொலை

பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்து: இளைஞா் மரணம்

ஓமலூா் அருகே தாய், மகன் வெட்டிக் கொலை: கொலையாளி தூக்கிட்டுத் தற்கொலை

மகள்கள் இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


