மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மகள்கள் இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே மகள் இறந்த துக்கத்தில் இருந்து வந்த தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 12:19 am

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே மகள் இறந்த துக்கத்தில் இருந்து வந்த தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டு, தீா்த்தவாரி தெருவைச் சோ்ந்தவா் அய்யனாா். லாரி ஓட்டுநா். இவரது மனைவி ஜெயந்தி(46). இவா்களது மகள்களான ஹா்ஷனி(10), கயல்(8) ஆகிய இருவரும் கடந்த 14 -ஆம் தேதி கீழ்புத்துப்பட்டு பகுதியில் கோயில் திருவிழாவுக்கு சென்றபோது, அங்குள்ள குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தனா்.

இதனால் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக ஆழ்ந்த சோகத்தில் இருந்து வந்த ஜெயந்தி செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.