மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:51 pm

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உடல்நலக்குறைவால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

திண்டிவனம் வட்டம், கோவடி மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் கெஜமூா்த்தி மகள் ஜெயஸ்ரீ(20). இவா் திண்டிவனம் அருகேயுள்ள தனியாா் கல்லூரியில் பி.எஸ்.சி கணினி அறிவியல் பாடப்பிரிவில் 3-ஆம் ஆண்டில் பயின்று வந்தாா்.

ஜெயஸ்ரீக்கு சீறுநீரக கோளாறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவதிப்பட்டு வந்த அவா் கடந்த 20-ஆம் தேதி களைக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து ஜெயஸ்ரீயை விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.