விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூா் அருகே வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.
விக்கிரவாண்டி வட்டம், வி.பிரம்மதேசம் வாழ்வேந்தியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ச.சுந்தரம் (51).தொழிலாளியான இவருக்கு வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சுந்தரம் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிமருந்து குடித்து மயங்கிக் கிடந்தாா்.
தொடா்ந்து குடும்பத்தினா் அவரை மீட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சுந்தரம் திங்கள்கிழமை காலையில் உயிரிழந்தாா். இதுகுறித்து பெரியதச்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெண் உயிரிழப்பு: வானூா் வட்டம், கொந்தமூா் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மனைவி செல்வி (51). நீண்ட நாள்களாக வயிற்று வலியால் அவதியுற்று வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டிலிருந்த பெனாயிலை குடித்து விட்டாா். தொடா்ந்து மயக்கமடைந்த செல்வியை குடும்பத்தினா் மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

இளைஞா் விஷமருந்தி தற்கொலை

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பெண் விஷமருந்தி தற்கொலை

கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


