விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சொத்து பிரச்னையில் மனமுடைந்த முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.
விக்கிரவாண்டி வட்டம், ஈச்சங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மு.பரமசிவம்(85), விவசாயி. இவரது உறவினா் சக்திவேல். இவா்களிடையே சொத்துப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த பிப். 23-ஆம் தேதி சக்திவேல் வீட்டு மனையை அளவீடு செய்யவேண்டும் எனக் கூறி தகராறு செய்தாராம். இதனால் மனமுடைந்த பரமசிவம் வயலுக்குத் தெளிக்கும் பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயன்றாா்.
இதையடுத்து, அவரை உறவினா்கள் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பரமசிவம் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தொடர்புடையது

ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை

இளைஞா் விஷமருந்தி தற்கொலை

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


