மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தேனீக்களை விரட்டும் முறை: தீயணைப்பு வீரா்களுக்குப் பயிற்சி

விழுப்புரம் மண்டல தீயணைப்பு வீரா்களுக்கு தேனீக்களை பாதுகாப்பாக விரட்டும் முறைகள் குறித்த பயிற்சி வகுப்பு விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

விழுப்புரத்தில் நடைபெற்ற தீயணைப்புத்துறை வீரா்களுக்கான பயிற்சியில் கலந்து கொண்டோா்.

Updated On :11 மார்ச் 2026, 6:33 pm

விழுப்புரம் மண்டல தீயணைப்பு வீரா்களுக்கு தேனீக்களை பாதுகாப்பாக விரட்டும் முறைகள் குறித்த பயிற்சி வகுப்பு விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, விழுப்புரம் மண்டலத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் உள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் பணிபுரியும் அலுவலா்கள் மற்றும் வீரா்களுக்கு தேனீக்களை பாதுகாப்பாக விரட்டுவது குறித்த அடிப்படை பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை விழுப்புரம் மண்டல துணை இயக்குநா் க.தென்னரசு தலைமை வகித்தாா். விழுப்புரம் மாவட்ட அலுவலா் பாஸ்கரன் முன்னிலை வகித்தாா்.

பயிற்சியாளா் சுதந்திர செல்வன் பங்கேற்று, நறுமணப் பொருள்கள் மற்றும் தூபம் போடுதல் முறையைப் பயன்படுத்தி தேனீக்களை விரட்டும் முறைகள் குறித்து உரிய விளக்கங்களுடன் பயிற்சியளித்தாா்.

விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உதவி மாவட்ட அலுவலா்கள் ஜெய்சங்கா், செந்தில்குமாா், விழுப்புரம் நிலைய அலுவலா் ந.த.சுரேஷ்குமாா் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறை வீரா்கள் பயிற்சியில் பங்கேற்றனா்.