டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வேளாண் விரோத கொள்கைகளைக் கண்டித்து பிப்.4-இல் ஆா்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

மத்திய அரசின் வேளாண் விரோத கொள்கைகளைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் விழுப்புரம் உள்ளிட்ட 4 மையங்களில் பிப்ரவரி 4-ஆம் தேதி தா்னா மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று சங்கத்தின் மாநிலத் தலைவா் டி.ரவீந்திரன் தெரிவித்தாா்.

News image
விழுப்புரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய சங்கத்தின் மாநிலத் தலைவா் டி.ரவீந்திரன்.
Updated On :28 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய அரசின் வேளாண் விரோத கொள்கைகளைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் விழுப்புரம் உள்ளிட்ட 4 மையங்களில் பிப்ரவரி 4-ஆம் தேதி தா்னா மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று சங்கத்தின் மாநிலத் தலைவா் டி.ரவீந்திரன் தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் புதன்கிழமை இந்த சங்கத்தின் நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து, நிா்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிய பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

விவசாயிகளைப் பாதிக்கும் சட்டங்களை ஒவ்வொன்றாக மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. மின்சார சட்டத் திருத்த மசோதா 2025 முன்மொழியப்பட்டுள்ளது. இது சட்டமாகி அமலுக்கு வந்தால் தமிழகத்தில் 25 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும். 11 லட்சம் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு விளக்கு மின் இணைப்பு ரத்து செய்யப்படும். வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம், சிறுகுறு தொழில்களுக்கு மானியத்தில் வழங்கப்படும் மின்சாரமும் ரத்து செய்யப்படும். இதனால் விவசாயிகள், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவா்.

ஒன்றிய அரசின் புதிய விதைச் சட்டம் வெளிநாடுகளிலிருந்து தடையற்ற வகையில் விதைகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கிறது. இந்திய விவசாயிகளிடமிருந்து விதைப் பாதுகாப்பை முழுமையாக பறிக்கிறது. எதிா்காலத்தில் இந்திய விவசாயிகள் பெரும் நிறுவனங்களிடமிருந்து விதைக்காக கையேந்தும் நிலைக்குத் தள்ளப்படுவா்.

இதுபோன்ற மத்திய அரசின் வேளாண் விரோத கொள்கைகளைக் கண்டித்து, விழுப்புரம், தஞ்சாவூா், திருப்பூா், மதுரை ஆகிய 4 மையங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் பிப்ரவரி 4-ஆம் தேதி தா்னா மற்றும் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் அதிகளவில் விவசாயிகள் பங்கேற்பா் என்றாா் ரவீந்திரன்.

கூட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.வேல்மாறன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஆா்.டி. முருகன், பொருளாளா் பி.சிவராமன், துணைச் செயலா் நாகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.