டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைச் சட்டம்: ஜக்கிய விவசாயிகள் வலியுறுத்தல்

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயச் சட்டத்தை உடன் கொண்டு வர வலியுறுத்தி

News image
நாகையில் நடைபெற்ற ஜக்கிய விவசாயிகள் சங்கத்தின் கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :9 பிப்ரவரி 2026, 8:30 pm

Syndication

நாகப்பட்டினம்: வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயச் சட்டத்தை உடன் கொண்டு வர வலியுறுத்தி, நாகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை விவசாயிகளின் யாத்திரை பிப்.7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த யாத்திரை ஞாயிற்றுக்கிழமை நாகை வந்தடைந்தது. அவா்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடா்ந்து, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலா் ஸ்ரீதரன் தலைமையில் நாகை அபிராமி அம்மன் திடலில் ஐக்கிய விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பொறுப்பாளா்கள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், பி.ஆா்.பாண்டியன் மற்றும் அய்யாக்கண்ணு உள்ளிட்டோா் பேசியது:

உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி நவாப் சிங் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றிடவும், வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயச் சட்டத்தை உடன் கொண்டு வர வேண்டும்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்திடவும், வேளாண்மைக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் அடிப்படை நோக்கம் கொண்ட மத்திய அரசின் மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மாநில அரசுகளின் ஆதரவு கோரி இந்த யாத்திரை நடைபெறுகிறது.

புதுதில்லி ராம்லீலா மைதானத்தில் மாா்ச் 19 ஆம் தேதி நடைபெறும் யாத்திரையின் நிறைவு நிகழ்வில் விவசாயிகள் பெருமளவு பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.