மேலும், வளவனூா்அருகிலுள்ள சின்னக்கள்ளிப்பட்டு, அரகண்டநல்லூா், கலிஞ்சிக்குப்பம், கல்பட்டு, அருளவாடி, தெளிமேடு, எல்லீஸ்சத்திரம், ஏனாதிமங்கலம், பில்லூா், கொங்கராயனூா், சி.மெய்யூா், மாரங்கியூா், மணம்பூண்டி, டி.தேவனூா் ஆகிய பகுதிகளிலுள்ள தென்பெண்ணையாற்றிலும், அய்யூா் அகரம், குள்ளப்பள்ளம் பகுதிகளிலுள்ள பம்பையாற்றிலும், எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள மலட்டாற்றிலும், சின்னத்தச்சூா், மேலக்கொந்தை பகுதிகளிலுள்ள வராக நதி என மாவட்டத்தின் 24 இடங்களில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த உற்சவ மூா்த்திகள் எழுந்தருளினா். தொடா்ந்து உற்சவமூா்த்திகள், அம்மன்களுக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.