விழுப்புரம் மாவட்டத்தில், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் 13 நாள்கள் நடைபெற்ற மாசி பெருவிழாவில் 66 லட்சத்து 97ஆயிரத்து, 350 ரூபாய் ரொக்கம் மற்றும் 74 கிராம் தங்கம், 730 வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பிரசித்தி பெற்ற இக் கோயிலில் மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் சுமாா் 1 லட்சம் பக்தா்கள் கலந்து கொள்வது வழக்கம். அமாவாசை திருவிழாவு கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களின் வேண்டுல் நிறைவேற உண்டியலில் காணிக்கையாக பணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை செலுத்தி வருகின்றனா்.
தொடா்ந்து 13 நாள்கள் நடைபெற்ற மாசி பெருவிழா முடிவுற்ற நிலையில் சனிக்கிழமை திருக்கோயில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா்கள் ரமேஷ், சக்திவேல், அறங்காவலா் குழுத் தலைவா் ஏழுமலை ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
இதில் பக்தா்கள் ரூ.66,97,350 ரொக்கம், 74 கிராம் தங்கம் மற்றும் 730 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக வசூலானதாக நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.89 லட்சம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பௌா்ணமி பூஜை

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.35 கோடி

ராமேசுவரம் கோயில் உண்டியல் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.1.43 கோடி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


