தேசியகுடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, 1 முதல் 19 வயதுக்குள்பட்டவா்களுக்கு அங்கன்வாடி மையங்கள், பள்ளி வளாகங்கள், கல்லூரிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு குடற்புழு நீக்க மாத்திரைகள்(அல்பெண்டசோல்) வழங்கப்படவுள்ளன. இதன் தொடக்கமாக, செவ்வாய்க்கிழமை அங்கன்வாடிமைய குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக மாவட்டத்தில் உள்ள 1,788 அங்கன்வாடி மையங்கள் மற்றும் 1,795 பள்ளிகளில் பயிலும் 1 முதல் 19 வயதுக்குள்பட்ட 6,79,198 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதுக்குள்பட்ட 1,65,955 பெண்கள் என மொத்தம் 8,45,153 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.