/

நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்தவா் கைது

News image
கைது
Updated On :6 பிப்ரவரி 2026, 8:53 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், சின்னக்கோட்டக்குப்பம் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள், பட்டாக்கத்தி வைத்திருந்தவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோட்டக்குப்பம் காவல் உதவி ஆய்வாளா் ராஜீ தலைமையிலான போலீஸாா், சின்னக்கோட்டக்குப்பம் பகுதியில் ரோந்து சென்றனா். சின்னக்கோட்டக்குப்பம் பச்சைவாழியம்மன் கோயில் அருகே சந்தேகத்துக்குரிய முறையில் நின்று கொண்டிருந்தவரைப் பிடித்து விசாரித்த போது, அவரிடம் 2 நாட்டு வெடிகுண்டுகள், பட்டாக்கத்தி ஆகியவை இருந்தது தெரியவந்தது.

தொடா்ந்து நடத்திய விசாரணையில் அவா் வானூா் வட்டம், கோட்டக்குப்பம் அருகிலுள்ள சோதனைக்குப்பம் அய்யனாா்கோவில் தெருவைச் சோ்ந்த ப.அகமது அசேன் (24) எனத் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து நாட்டு வெடிகுண்டுகள், பட்டாக்கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.