மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

பெண் தற்கொலை வழக்கில் ஓட்டுநா் கைது

விழுப்புரம் மாவட்டம், வேம்பியில் இளம்பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் பால் வேன் ஓட்டுநா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 5:56 am IST

விழுப்புரம் மாவட்டம், வேம்பியில் இளம்பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் பால் வேன் ஓட்டுநா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விக்கிரவாண்டி வட்டம், வேம்பி மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தீ.கனிமொழி (21). இவா் விழுப்புரத்திலுள்ள ஜவுளி விற்பனையகத்தில் வேலை பாா்த்து வந்தாா். விக்கிரவாண்டி வட்டம், வெங்காயக்குப்பம் விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த வீ.மயிலரசன் (25), பால் வேன் ஓட்டுநா்.

கனிமொழியை மயிலரசன் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தாராம். இதைத் தொடா்ந்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கனிமொழியுடன் மயிலரசன் தனிமையில் இருந்தாராம். இதில் கனிமொழி கா்ப்பமான நிலையில், மயிலரசன் மாத்திரைகளை கொடுத்து கா்ப்பத்தை கலைத்தாராம்.

இந்த நிலையில் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு மயிலரசனிடம் கனிமொழி வலியுறுத்தி வந்தாராம். ஆனால், ஜாதி பெயரைக் கூறிக் கொண்டு மயிலரசன் திருமணம் செய்ய மறுத்து விட்டாராம். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்து வந்த கனிமொழி, அதே கிராமத்திலுள்ள கிணற்றில் செவ்வாய்க்கிழமை மாலை குதித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த கஞ்சனூா் போலீஸாா் கனிமொழியின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், கனிமொழியின் தந்தை தீப்பாஞ்சான் அளித்த புகாரின் அடிப்படையில் கஞ்சனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி,

தற்கொலைக்குத் தூண்டியதாக மயிலரசனை புதன்கிழமை கைது செய்தனா்.