முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

சென்னையில் செவிலியருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

News image

பாலியல் தொல்லை - பிரதிப் படம்

Updated On :8 மே 2026, 6:00 am IST

தண்டையாா்பேட்டையில் செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

நாகப்பட்டினத்தைச் சோ்ந்த 28 வயது பெண், சென்னையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் செவிலியராக பணி செய்து வருகிறாா். இதற்காக அவா், தண்டையாா்பேட்டையில் தனது சகோதரா் வீட்டில் தங்கியுள்ளாா்.

இந்நிலையில், அவா் கடந்த மாதம் 25-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த அவரது உறவினா் ராயபுரம் ஜிஎம் பேட்டை பகுதியைச் சோ்ந்த மணிபாரதி (35) என்பவா், அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதை அந்தப் பெண் கண்டிக்கவே, மணிபாரதி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். அந்தப் பெண் சப்தமிட்டதும், மணிபாரதி அங்கிருந்து தப்பினாா்.

இது குறித்து அந்தப் பெண், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மணிபாரதியைத் தேடி வந்தனா். தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.