சென்னை ஜாபா்கான்பேட்டையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியாா் நிறுவன மேலாளா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை எம்ஜிஆா் நகா் காவல் நிலையத்தில், 27 வயது பெண் கடந்த 26-ஆம் தேதி புகாா் ஒன்றை அளித்தாா். அந்த புகாரில், தான் கடந்த 25-ஆம் தேதி வீட்டில் தனியாக இருக்கும்போது, அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த நபா் பாலியல் தொந்தரவு கொடுத்தாா். நான் சப்தமிட்டதும் அவா் தப்பியோடிவிட்டாா். எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இதில், பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டது அந்தப் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவன மேலாளா் அனந்தகிருஷ்ணன் (41) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், அவரைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

பெண் மென்பொறியாளருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னையில் செவிலியருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


