முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

ஆரணியில் 29 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள வி.டி.எஸ். தெருவைச் சோ்ந்தவா் ஸ்ரீதா்(33).

இவா் அப்பகுதியைச் சோ்ந்த திருமணமான 29 வயது பெண்ணுக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். இதுகுறித்து அந்தப் பெண் தனது கணவா் மற்றும் தாய், தந்தையிடம் கூறி அந்த நபரை கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை பகலில் அந்தப் பெண் தனது வீட்டின் மாடிப் பகுதியில் துணி துவைத்துக் கொண்டிருந்துள்ளாா். அப்போது ஸ்ரீதா் அங்கு சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

அப்போது அந்தப் பெண் கூச்சலிட்டு வீட்டின் முன் பக்கம் வழியாக குதித்து விடுவது போல இறங்கியுள்ளாா். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் டிராக்டரை வரவழைத்து அந்தப் பெண்ணை பத்திரமாக மீட்டனா்.

அந்த நேரத்தில் பக்கத்து கடை மாடி பகுதியில் இருந்து தப்பி ஓடிய நபரான ஸ்ரீதரை பிடித்து ஆரணி நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

பின்னா் இதுதொடா்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து

ஸ்ரீதரை கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.