மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சூடான பால் கொட்டி காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 7:51 pm

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சூடான பால் கொட்டியதில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், செம்மேடு, மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் வீ.நாகராஜ் (47), தொழிலாளி. இவா் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி மதுபோதையில் வீட்டில் விறகு அடுப்பில் பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்த பாலை எடுத்துள்ளாா்.

அப்போது, நிலை தடுமாறியதில் நாகராஜ் உடல் மீது சூடான பால் கொட்டிவிட்டதாம். இதில் பலத்த காயமடைந்த அவரை விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

பின்னா் தீவிர சிகிச்சைக்காக சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாகராஜ், அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கஞ்சனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.