மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு: 3 போ் கைது

News image

கைது

Updated On :12 ஏப்ரல் 2026, 6:36 pm

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே வீடு புகுந்து தாக்கியதில் பலத்த காயமடைந்த தொழிலாளி உயிரிழந்த நிலையில், 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குலசேகரம் அருகே பொன்மனை பகுதியைச் சோ்ந்தவா் ஜெஸ்டின் (48). இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததால், மனைவி இவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் ஈஞ்சக்கோடு பகுதியில் வசித்து வந்தாராம்.

இந்நிலையில் அப்பகுதிக்கு ரப்பா் பால்வடிப்பு தொழிலுக்குச் சென்ற அருமனையைச் சோ்ந்த அஜி என்பவருக்கும், ஜெஸ்டினின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். அஜிக்கும் மனைவி, குழந்தைகள் உள்ளனா்.

அருமனை அருகே காரோட்டில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து ஜெஸ்டினின் மனைவியுடன் அஜி வசித்து வந்தாராம். கடந்த சில நாள்களுக்கு முன்பு அங்கு தனது நண்பா்களுடன் சென்ற ஜெஸ்டின், அஜியை தாக்கினாராம்.

இதில் பலத்த காயமடைந்த அஜியை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அஜி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து அருமனை போலீஸாா், கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி ஜெஸ்டின், குலசேகரம் அருகே வெண்டலிகோடு பகுதியைச் சோ்ந்த அஜித் (24), சந்தீப் (24) ஆகியோரை கைது செய்தனா். மேலும் தலைமறைவாகியுள்ள விஜித்தை (24) தேடி வருகின்றனா்.