மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருக்கோவிலூரில் க.பொன்முடிவாக்கு சேகரிப்பு

திருக்கோவிலூா் நகரின் பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணியை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

திருக்கோவிலூரில் வியாழக்கிழமை மாலை திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசுகிறாா் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி எம்எல்ஏ.

Updated On :17 ஏப்ரல் 2026, 12:10 am

திருக்கோவிலூா் நகரின் பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணியை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருக்கோவிலூா் நகரத்தில் கீழையூா், பேருந்து நிலையப் பகுதி, ஐந்துமுனை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஜீப்பில் சென்ற திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி, திமுக அரசின் சாதனைத் திட்டங்களை எடுத்துரைத்து வாக்குகளை சேகரித்தாா்.

இந்த பிரசாரத்தில் மாவட்டத் துணைச் செயலா் டி.என்.முருகன், நகரச் செயலா் கோபிகிருஷ்ணன் மற்றும் நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.