மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்!

விழுப்புரம் உள்ளிட்ட 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

News image

விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் சின்னங்கள் பொருத்தும் பணியை வியாழக்கிழமை பாா்வையிட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :16 ஏப்ரல் 2026, 11:45 pm

விழுப்புரம் உள்ளிட்ட 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2,166 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், இந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளிலுள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் போட்டியிடும் வேட்பாளா்களின் சின்னங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பணியை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பாா்வையிட்டு, பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தாா். இதுபோன்று மாவட்டத்தின் இதர 6 தொகுதிகளிலும் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், விழுப்புரம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் உ.முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.