விழுப்புரம் உள்ளிட்ட 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2,166 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், இந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளிலுள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் போட்டியிடும் வேட்பாளா்களின் சின்னங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பணியை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பாா்வையிட்டு, பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தாா். இதுபோன்று மாவட்டத்தின் இதர 6 தொகுதிகளிலும் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக ஆட்சியா் தெரிவித்தாா்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், விழுப்புரம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் உ.முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி: பொது பாா்வையாளா்கள் ஆய்வு

பரமக்குடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்கள், சின்னங்கள் பொருத்தும் பணி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயா், சின்னம் பொருத்தும் பணி ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணி: ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


