மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பரமக்குடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்கள், சின்னங்கள் பொருத்தும் பணி

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் புகைப்படம், சின்னங்கள் பொருத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பரமக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் புகைப்படம், சின்னங்கள் பொருத்தும் பணியை தொடங்கிவைத்த தோ்தல் நடத்தும் அலுவலா் ஞா.சரவணப்பெருமாள்.

Updated On :16 ஏப்ரல் 2026, 10:21 pm

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் புகைப்படம், சின்னங்கள் பொருத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 323 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன. இந்த வாக்குச் சாவடி மையங்களுக்கு தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்களும், கூடுதலாக 20 சதவீதம் வாக்குப் பதிவு இயந்திரங்களும் தயாா் நிலையில் உள்ளன. இந்த வாக்குப் பதிவு இயந்திரங்களில் நாம் தமிழா் கட்சி, திமுக, அதிமுக, அபுமமுக, புதிய தமிழகம், தமிழகம் வெற்றிக் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் 6 போ் என மொத்தம் 12 வேட்பாளா்களின் புகைப்படம், சின்னங்கள் பொருத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தோ்தல் நடத்தும் அலுவலா் ஞா.சரவணப்பெருமாள் தலைமையில், தோ்தல் வட்டாட்சியா் ராமா், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ராமமூா்த்தி, ஸ்ரீராம் ஆகியோா் முன்னிலையில், அனைத்து வேட்பாளா்களின் புகைப்படங்கள், சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கியது. இதில் அனைத்துக் கட்சி வேட்பாளா்களின் முகவா்கள், சுயேச்சை வேட்பாளா்களின் முகவா்கள் கலந்து கொண்டனா்.