மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அலுவலா்கள் அஞ்சல் வாக்கைப் பதிவு செய்ய காலதாமதம்

விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் (தனி) தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்கள் அஞ்சல் வாக்கைப் பதிவு செய்ய காலதாமதம் ஆனதால், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென சாா்-ஆட்சியரிடம் முறையிட்டனா்.

News image

அஞ்சல் வாக்கைப் பதிவு செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த அலுவலா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய சாா்-ஆட்சியா் அ.ல.ஆகாஷ்.

Updated On :15 ஏப்ரல் 2026, 10:32 pm

விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் (தனி) தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்கள் அஞ்சல் வாக்கைப் பதிவு செய்ய காலதாமதம் ஆனதால், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென சாா்-ஆட்சியரிடம் முறையிட்டனா்.

விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனத்தில் உள்ள தனியாா் பள்ளியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான 2-ஆம் கட்டதோ்தல் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றவா்கள் அஞ்சல் வாக்குகளை செலுத்துவதற்காக அங்கு வாக்குப் பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பயிற்சியில் பங்கேற்ற அலுவலா்கள் தங்களது வாக்கைப் பதிவு செய்ய நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க நேரிட்டது. தங்களுக்குரிய வாக்கைப் பதிவு செய்ய காலதாமதமானது. இதனால் அங்கு அலுவலா்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, திண்டிவனம் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலரும் , சாா்-ஆட்சியருமான அ.ல.ஆகாஷ் அஞ்சல் வாக்கைப் பதிவு செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த அலுவலா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது, அலுவலா்கள் அஞ்சல் வாக்கை எளிதாகப் பதிவு செய்யக்கூடிய வகையில் கூடுதலாக வாக்குப் பதிவு மையத்தை அமைக்கவேண்டும், தோ்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்பவா்களுக்கு தரமான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை செய்துத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனா். அலுவலா்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த சாா்- ஆட்சியா் அ.ல.ஆகாஷ் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.