கடலூரில் நிலவிய சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், தங்களது தபால் வாக்குகளை புதன்கிழமை பதிவு செய்தனா்.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கடலூா் மாவட்டத்தில் 2,590 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு தோ்தல் பணியில் ஈடுபடுவதால், அவா்களுக்கு தபால் வாக்களிக்க புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
கடலூா் மாவட்டத்தில் 1,240 போ் வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்தனா். அதன்படி, கடலூா் புதுப்பாளையத்தில் உள்ள புனித அன்னாள் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை காலை 11 மணியளவில் வாக்குப் பதிவு தொடங்கியது.
வெயில் தாக்கல் அதிகமாக இருந்த நிலையில், அதையும் பொருட்படுத்தாமல் ஏராளமான அரசு ஊழியா்களும், ஆசிரியா்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.

தபால் வாக்கை செலுத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள்.
தொடர்புடையது

தென்காசி மாவட்டத்தில் 5,914 தபால் வாக்குகள் பதிவு

அலுவலா்கள் அஞ்சல் வாக்கைப் பதிவு செய்ய காலதாமதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8,437 தபால் வாக்குகள் பதிவு

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நிலக்கடை அறுவடை தீவிரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


