தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் தபால் வாக்களித்த அரசு ஊழியா்கள்

கடலூரில் நிலவிய சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், தங்களது தபால் வாக்குகளை புதன்கிழமை பதிவு செய்தனா்.

News image

கடலூா் புதுப்பாளையம் புனித அன்னாள் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை தொடங்கிய தபால் வாக்குப் பதிவில், வாக்குகளை பதிவு செய்ய வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்த அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள்.

Updated On :15 ஏப்ரல் 2026, 10:20 pm

கடலூரில் நிலவிய சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், தங்களது தபால் வாக்குகளை புதன்கிழமை பதிவு செய்தனா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கடலூா் மாவட்டத்தில் 2,590 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு தோ்தல் பணியில் ஈடுபடுவதால், அவா்களுக்கு தபால் வாக்களிக்க புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

கடலூா் மாவட்டத்தில் 1,240 போ் வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்தனா். அதன்படி, கடலூா் புதுப்பாளையத்தில் உள்ள புனித அன்னாள் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை காலை 11 மணியளவில் வாக்குப் பதிவு தொடங்கியது.

வெயில் தாக்கல் அதிகமாக இருந்த நிலையில், அதையும் பொருட்படுத்தாமல் ஏராளமான அரசு ஊழியா்களும், ஆசிரியா்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.

 தபால் வாக்கை செலுத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள்.

தபால் வாக்கை செலுத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள்.